குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Saturday, December 17, 2011


"நா" காத்தல் நன்று


சுழலும் நாக்கு 
சாட்டை


பின்டினியெடுக்கும்
சொற்கள்


விழுங்க முடியாமல்
அவஸ்தைபபடும்
செவிகள்


காயமில்லை எனினும்
சுருங்கிக் கொள்ளும்
உடல்


மனமெல்லாம்
வடுக்கள்
பெயர்த்தெடுக்க முடியாது


காயமும் ரணமும்
அரூபமாய்...


வன்சொற்கள் பட்ட
நெஞ்சத்தில்
சிதறி விடும் உறவுகள்...


சேதாரம்
சொற்களுக்கில்லை
நினைவுகள்தான்
நிம்மதியற்று அலையும்...


நினைத்த கணம்
குத்திய சொற்களால்
ரணமாகி கசியும் எண்ஜானும்

வெக்கையில்
வெளியேறுகிறது
உயிரின் வேர்வை...


தாயின் உள்ளங்கையுள்
மழலை கை
இப்படியாய் இருக்க வேண்டும்
சொற்கள்


"நா" காத்தல் நன்று / யாரும்.


       - கா.அமீர்ஜான்

திசம்பர் - 2011 - சௌந்தரசுகன் 

2 comments:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_4280.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    சிறப்பான பகிர்வுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்!

    வலைத்தமிழ் கண்டு வணங்குகிறேன்! உன்றன்
    கலைத்தமிழ் மின்னும் கமழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete