குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Sunday, June 21, 2009

கவிதை - லசி

உன்
இருமலின் அர்த்தம்
புரிந்து
குழந்தைகளின்
உறக்கம் கலையாமல்
உன் அறையில்
விடியும் வரை நான்.
சில நாட்களாய்
அந்த இருமலை எதிர்பார்த்து
நான் உறங்குவதே இல்லை.
விடியும் வரையும்
நீ இருமுவதே இல்லை
அப்படிதான்
என்ன வயதாகி விட்டதோ
உனக்கு.

-லசி

Monday, June 15, 2009

கவிதை - சுகந்தா

எந்த உறவும் இல்லாமல்
நடிப்பும் இல்லாமல்
அன்புக்காக
ஏங்கும் நீ
அனாதை என்று
அழைக்கப்படுகிறாய்!

எல்லா உறவுகளுடனும்
அன்பு இல்லாமல்
நடித்தால் மட்டுமே போதும்
என்று வாழ
பழகிக் கொண்ட நான் -
என்னவென்று அழைக்கப் படுவேன்!

-சுகந்தா

சுகன் - சூன் - 2009

சொன்னானாம்
மீண்டும் மீண்டு்ம் ஒலிபரப்பான
நீண்ட இரங்கல் மி்கையென்றும்
காட்டப்பட்ட தனது
உடலின் ஒப்பனையில்
கவனம் போதாதென்றும்!

-இரா.எட்வின

சுகன் கவிதை

எழுத்துப் புழுக்கைகளை
இட்டுச் செல்லும்
எழுதுகோல் ஆட்டிற்கு
மேய்ச்சல் எது!
தீனி எது!
எது!எது!எது!
என்னைத தவிர...

-சுகன்

சௌந்தரசுகன் சூன் 2009