குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Tuesday, August 9, 2011

எதிர்ப்பதம்

மனிதர்களின்
நிழல்களுக்குள்
மௌன நரம்புகள் !

உயிர்ப்பின்
நகலென்றாலும்
உணர்வின்
அசல் அல்ல !

கனவுகள்
நினைவுகளின்
மலடுகள் !

காற்றிலாடும்
ரோசாவின்
பேரழகு
மண்ணிலிருந்து
என்பதை
நம்ப மறுத்து
மயங்குகிறது
மனசு !

எதார்த்தத்தின்
எதிர்ப்பதம்
தேடி அலையும்
மனசின் பாய்ச்சல்
அடங்க மறுக்கிறது
எந்த இலாகானுக்கும் !

- சுகன்.

No comments:

Post a Comment