
எதிர்ப்பதம்
மனிதர்களின்
நிழல்களுக்குள்
மௌன நரம்புகள் !
உயிர்ப்பின்
நகலென்றாலும்
உணர்வின்
அசல் அல்ல !
கனவுகள்
நினைவுகளின்
மலடுகள் !
காற்றிலாடும்
ரோசாவின்
பேரழகு
மண்ணிலிருந்து
என்பதை
நம்ப மறுத்து
மயங்குகிறது
மனசு !
எதார்த்தத்தின்
எதிர்ப்பதம்
தேடி அலையும்
மனசின் பாய்ச்சல்
அடங்க மறுக்கிறது
எந்த இலாகானுக்கும் !
- சுகன்.
No comments:
Post a Comment